Header Ads



"HIV வதந்தி" சிறுவனுக்கு அடைக்கலம், கொடுக்க முன்வந்த முஸ்லிம் பாடசாலையின் முன்மாதிரி


-விடிவெள்ளி-

குளி­யா­பிட்­டி பிர­தே­சத்தைச் சேர்ந்த ரொஹான் டில்­சார எனும் சிறு­வ­னுக்கு எயிட்ஸ் இருப்­ப­தாக பர­விய வதந்தி கார­ண­மாக அவன் கல்வி கற்று வந்த அப் பிர­தேச பாட­சா­லை­யி­லி­ருந்து விலக்­கப்­பட்­டமை தொடர்­பான தக­வல்­களை நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள்

தற்­ச­மயம் குறித்த சிறு­வனின் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­பட்­டுள்­ளது. கண்டி திருத்­துவ கல்­லூ­ரியில் ரொஹான் டில்­சா­ரவை இணைத்துக் கொள்ளும் பொருட்டு நேற்று முன்­தினம் கல்வி அமைச்­சினால் ஒப்­பந்தம் ஒன்றும் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் இச் சிறு­வ­னுக்கு இழைக்­கப்­பட்ட அநீதி தொடர்­பான தக­வல்கள் வெ ளியா­ன­தை­ய­டுத்து அச் சிறு­வனை  தமது பாட­சா­லையில் இணைத்துக் கொள்­வ­தாக குரு­நாகல் ஸாஹிராக் கல்­லூரி அதிபர் அஷ்ஷெய்க் மஸாஹிம் (நளீமி) சமூக ஊடங்கள் வாயி­லான அறி­விப்­பொன்றை விடுத்­தி­ருந்தார்.

எனினும் பின்னர் கொழும்பு ஆனந்தா கல்­லூரி மற்றும் கண்டி திரித்­துவ கல்­லூரி என்­ப­னவும் குறித்த சிறு­வனை தமது பாட­சா­லை­களில் இணைத்துக் கொள்ள முன்­வந்­தி­ருந்­ததால் குரு­நாகல் ஸாஹிரா கல்­லூ­ரியின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்­தப்­ப­ட­வில்லை.

இந் நிலையில் ஒரு முஸ்லிம் பாட­சாலை என்ற வகையில் குரு­நாகல் ஸாஹிரா கல்­லூரி குறித்த மாண­வனை இணைத்துக் கொள்ள முன்­வந்­த­மைக்­கான காரணம் என்ன என்று கல்­லூரி அதிபர்  அஷ்ஷெய்க் மஸாஹிம் (நளீமி) யை விடி­வெள்ளி தொடர்பு கொண்டு வின­வி­யது.

இந்த மாண­வனை இணைத்துக் கொள்­ளு­மாறு யாரேனும் உங்­க­ளிடம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கோரிக்கை விடுத்­தார்­களா?
இல்லை.

சமூக ஊடங்­களில் இந்த மாணவன் பாட­சா­லை­யி­லி­ருந்து விலக்­கப்­பட்­டமை பற்­றிய செய்­தி­களை நான் அறிந்து கவ­லைப்­பட்டேன். எனது நண்­பர்கள் சிலரும் என்னைத் தொடர்பு கொண்டு நீங்கள் ஏன் இந்த மாண­வனை உங்கள் பாட­ச­லையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று என்­னிடம் கேட்­டார்கள். அவர்­க­ளது கோரிக்கை சரி எனப்­பட்­டதால் நானும் அதற்­கான சம்­ம­தத்­தினை பேஸ் புக் மூல­மாக தெரி­வித்தேன்.

எயிட்ஸ் நோய் பற்­றிய வதந்­தி­யினால் அம் மாண­வ­னுக்கு குளி­யா­பிட்­டி பாட­சா­லையில் அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்ள நிலையில் என்ன நம்­பிக்­கையில் அந்த மாண­வனை சேர்த்துக் கொள்ள நீங்கள் சம்­மதம் வெளி­யிட்­டீர்கள்?
முதலில் இந்த விடயம் ஓர் வதந்தி என்ற அடிப்­ப­டை­யிலும் எயிட்ஸ் நோய் என்றால் என்ன என்­பது பற்­றிய பூரண தெளிவு எனக்­கி­ருக்­கி­றது என்ற அடிப்­ப­டை­யி­லுமே நான் இதற்­கான சம்­ம­தத்தை வெ ளியிட்டேன்.

இந்த விட­யத்தை நாம் மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யி­லேயே நோக்க வேண்டும். ஒரு மாண­வனின் கல்வி உரி­மையை எந்தக் காரணம் கொண்டும் எவ­ராலும் மறுக்க முடி­யாது. இந்த நாட்டில் எந்­த­வொரு பாட­சா­லை­யிலும் கல்­வியைத் தொடர்­வ­தற்­கான உரிமை அவ­னுக்­குண்டு. 

உங்கள் பாட­சா­லையில் கல்வி கற்கும் மாண­வர்­களின் பெற்றோர் இதனை எதிர்க்­க­மாட்­டார்கள் என்று நம்­பி­னீர்­களா?
அதிபர் என்ற வகையில் நான் கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளாக இந்தப் பாட­சா­லையை மிகச் சிறப்­பாக வழி­ந­டாத்தி வரு­கிறேன். அந்த வகையில் எனக்கும் மாண­வர்­க­ளுக்கும் பெற்­றோர்­க­ளுக்­கு­மி­டையில் மிகச் சிறந்த உறவு இருக்­கி­றது.

நான் என்ன தீர்­மானம் எடுத்­தாலும் அதனை பெற்றோர் ஏற்றுக் கொள்­வார்கள் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது. அந்த துணிச்­ச­லில்தான் இந்த அறி­விப்பை நான் வெளி­யிட்டேன் என்றார்.

குரு­நாகல் ஸாஹிரா கல்­லூரி அதி­பரின் இந்த நிலைப்­பாடு தொடர்பில் சமூக ஊடகங்கள் வாயிலாக பலரும் வரவேற்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர். 

இன மத மொழி வேறுபாடுகளுக்கப்பால் குறித்த சிறுவனின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த முன்வைந்தமை குறித்து பெரும்பான்மை இனத்தவர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.