Header Ads



3 பிள்­ளை­களின் தாய் பாத்­திமா சியாரா எரித்துகொலை, சந்தேக நபர் தப்பியோட்டம்

மூன்று பிள்­ளை­க­ளுடன் வீட்டில் தனி­மையில் வாழ்ந்து வந்த குடும்பப் பெண் ஒருவர் எரி பொ­ருளை ஊற்றி எரித்து கொலை செய்­யப்பட்ட சம்­பவம் ஒன்று நேற்றுக் -11- காலை தெல்­தெ­னிய கும்­புக்­கந்­துறை பிர­தே­சத்தில் நிகழ்ந்­துள்­ள­தாக தெல்­தெ­னிய பொலிஸார் தெரி­வித்­தனர்.

திகண கும்­புக்­கந்­துறை என்ற முஸ்லிம் கிரா­மத்தில் நிகழ்ந்­துள்ள இச்­சம்­ப­வத்தில் முத்­தலிப் பாத்­திமா சியாரா (வயது 35) என்ற மூன்று பிள்­ளை­களின் தாயாரே இவ்­வாறு கொல்­லப்­பட்­டுள்ளார்.

இப்­பெண்ணின் கணவர் வெளி­நாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில் இப்பெண் தம் மூன்று பிள்­ளை­க­ளுடன் வீட்டில் வசித்து வந்­துள்ளார்.

இச்­சம்­பவம் குறித்து அய­ல­வர்கள் தெல்­தெ­னிய பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வருகின்றனர்.

இச்­சம்­ப­வத்­துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் தற்போது தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 comment:

  1. சந்தேக நபர் ஒரு முஸ்லிம் என்று போட்டிருக்கலாமே!!!

    ReplyDelete

Powered by Blogger.