Header Ads



ஆட்சியாளர்களுக்கு கசப்பான மருந்தை, கொடுக்க போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை

மக்கள் ஆட்சியாளர்களுக்கு கசப்பான மருந்தை கொடுக்க போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் ஜனாதிபதியும் பிரதமரும் கசப்பான மருத்தை அருந்த நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கசப்பான மருந்தை அருந்தை மக்கள் அல்ல ஆட்சியாளர்களே அருந்த நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

100 நாள் வரவு செலவுத்திட்டத்தில் செல்வந்தர்களின் பணத்தை எடுத்து சாதாரண மக்களுக்கு கொடுப்பதாக காட்டிய போதிலும் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அதில் மறுபக்கம் காட்டப்பட்டுள்ளது.

பங்கு பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் பிரதான அதிகாரியான கலாநிதி நாலக கொடஹேவா கைது செய்யப்பட்டுள்ளார். அது சம்பந்தமாக விசாரணைகளை நடத்திச் செல்ல தடையில்லை.

ஆனால், முன்னாள் அரசாங்கத்திற்கு உதவினார் என்று பழிவாங்கக் கூடாது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Munbu makluku ippa aatchiyalaruka vekkapadungal Mr udan irunthaditku

    ReplyDelete

Powered by Blogger.