Header Ads



ஒலிவாங்கி செயற்படாமைக்காக, அறிக்கை கேட்கும் ரணில்..!

தாம் உரையாற்றும் போது திடீரென ஒலிவாங்கி செயற்படாமல் போனமை தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வாய்மூல பதிலை எதிர் பார்த்து தொடரப்பட்ட கேள்வியின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி கொழும்பு அதிவேக வீதியின் எஞ்சிய பகுதி வேலைகள் நிறைவுறுத்தப் படாமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும பல கேள்விகளை பெருந்தெருக்கள் அமைச்சரிடம் முன்வைத்தார்.

இதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் வழங்க முற்பட்ட போதே ஒலிவாங்கி செயலிழந்தது.

இதற்கான காரணம் குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் நாடாளுமன்ற செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.