லறீனா அப்துல் ஹக்கின் 'சுயமி' 'நீட்சிபெறும் சொற்கள்' அறிமுக விழா
லறீனா அப்துல் ஹக்கின் 'சுயமி' மெல்லிசைப் பாடல் இறுவட்டு மற்றும் 'நீட்சிபெறும் சொற்கள்' நூல் அறிமுக விழா எதிர்வரும் 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை) மாலை: 3.30 மணிக்கு மெக்கலம் வீதி கொழும்பு 10 இல் அமைந்துள்ள தபால் தலைமையகக் காரியாலயக் கேட்போர் கூடத்தில் பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ எம். எஸ். எஸ். அமீர் அலி, அவர்களும் சிறப்பு அதிதியாக திருமதி பத்மா சோமகாந்தன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
முதற்பிரதியை புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் பெற்றுக்கொள்வார்.
நூலாய்வினை எழுத்தாளர் தெளிவத்தை ஜோஸப் அவர்களும் பாடல் இறுவட்டு விமர்சனத்தை சிரேஸ்ட ஒளிபரப்பாளர் அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். நூலாசிரியரும் பாடகியுமான லறீனா அப்துல் ஹக் ஏற்புரை நிகழ்த்துவார்.
Post a Comment