Header Ads



அமைச்சர் திலக் மாரப்பன இராஜினாமா, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைப்பு

சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளார்.

தற்பொழுது அமைச்சர் திலக் மாரப்பனவின் இல்லத்தில் நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தனது முடிவை அறிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் திலக் மாரப்பனவின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜினாமா கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தற்பொழுது நடைபெற்றுவரும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.