Header Ads



"மஹிந்த ராஜபக்ச, மீண்டும் வர வேண்டும்"

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாதத்தை அரசியல் ரீதியில் தோல்வியடைய செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு தான் ஆயத்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் இருந்து கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் தன்னுடன் இணைந்து செயற்படுமாறு முன்னிலை சோஷலிச கட்சியை உட்பட தான் அழைப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. நல்லாட்சி நல்லாட்சி என்று சொல்லி கடைசியில் தின்பாருக்கு தேன் எடுத்து கொடுத்த கதையாகத்தான் வரும் போல் தெரிகிறது.ஒரு வருடம் ஆக வில்லை இவ்வலவு பிரச்சினை ஐந்து வருடம் எவ்வாறு ஓடும்

    ReplyDelete

Powered by Blogger.