Header Ads



மும்பாய் விமான நிலையத்தில் 85ஆயிரம் டொலர்களுடன் இலங்கையர் கைது

மும்பாயின் அன்ஹெரி விமானநிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் 85ஆயிரம் டொலர்கள் சகிதம் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் நேற்று (06)  இடம்பெற்றுள்ளது கொழும்புக்கு செல்ல முயற்சித்த போதே இவர் கைதுசெய்யப்பட்டார்.

விமானம் புறப்படும் நேரத்தில் அந்த விமானத்தில் ஏறுவதற்கு குறித்த மொஹமட் .................... என்ற இந்த இலங்கையர் அவசரப்பட்டமையை அடுத்து சந்தேகம் கொண்டு அதிகாரிகள் அவரை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்த அவர் பின்னர் பலவந்தமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.

அத்துடன் விசாரணையின் போது தாம் நாணய கடத்தலில் ஈடுபடும் ஒருவர் என்பதை ஏற்றுக்கொண்ட ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கை சென்ற தாம், அந்த நாணயங்களை இந்திய ரூபாய்கள் மாற்றி சிறந்த லாபத்தை பெற்றுக்கொள்ளவே மும்பாய் வந்ததாக தெரிவித்தார்.

எனினும் உரிய ஆவணங்கள் இல்லாமை காரணமாக தம்மால் நாணயங்களை மாற்றமுடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்ட அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்

No comments

Powered by Blogger.