Header Ads



வாஸ் உள்ளிட்ட 6 பேர், மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு

முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளது.

அவர்கள் தரப்பில் வாதாடி சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 14 தினங்களுக்குள் இந்த மேன்முறையீடு செய்யப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பம்பலபிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாமை கடத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.