Header Ads



இந்திய முஸ்லிம்களின் தேசபக்திக்கு, இதைவிட வேறு சான்று வேண்டுமா..?

'சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா' ...
தந்தையை இழந்த தருணத்திலும் தாய்நாட்டை நேசிக்கும் 'சர்தாஜ்'..!

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வதந்தியை பரப்பி 'படுகொலை' செய்யப்பட்ட 'முஹம்மத் அக்லாக்'கின் மூத்த மகன் 'சர்தாஜ்' NDTV தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், தந்தையை இழந்த, தம்பி(தானிஷ்) குற்றுயிரும் குலைஉயிருமாக மருத்துவமனையில் கிடத்தப்பட்டுள்ள இந்த தருணத்திலும், தான் தாய்நாட்டை நேசிப்பதாக சொல்லியிருக்கிறார்.

'சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா'

'மஸ்ஹப் நஹீ சிகாதா ஆபஸ் மே பைர் ரக்னா'

என்ற அவரது வார்த்தைகளை கேட்டதும் அரங்கமே கைதட்டி சர்தாஜ்'க்கு ஆதரவு அளித்தது.

நிகழ்ச்சியின் நெறியாளரே, மிகவும் நெகிழ்ந்து போய், இந்த தருணத்திலும் நீங்கள் இந்த தேசத்தை நம்புகிறீர்களா? என மீண்டும் மீண்டும் கேட்டு மெய் சிலிர்த்துப் போனார்.

ஒரு சிலர் எனது வீட்டுக்குள் புகுந்து எனது தந்தையை அடித்துக் கொன்று, தம்பி 'தானிஷ்'ஐ மூர்ச்சையாகும் அளவுக்கு தாக்கியுள்ள (செத்துவிட்டான் என்ற நம்பிக்கையில் விட்டுவிட்டு சென்ற) கொடூரமான இந்த சம்பவத்துக்குப் பிறகும், இந்த தேசத்தின் ஏனைய மக்களின் மீது தான் நல்லெண்ணத்துடன் இருப்பதாகவே கூறுகிறார், சர்தாஜ்.

முஸ்லிம்களின் தேசபக்திக்கு இதைவிட வேறு என்ன ஆதாரத்தை எதிர்ப்பார்க்கிறது இந்த தேசம்???

தகவல் உதவி
NDTV

1 comment:

  1. "எல்லோரையும் நம்புவது" முட்டாள்தனம்!.

    அதைவிடவும் முட்டாள்தனம், "யாரையுமே நம்பாமலிருப்பது!"

    ReplyDelete

Powered by Blogger.