Header Ads



சாய்ந்தமருது பாடசாலையொன்றில், கட்டிப்புரண்டு சண்டையிட்ட ஆசிரியர்கள்

கல்முனை கல்வி வலயத்தில் சாய்ந்தமருது கோட்டத்தில் உள்ள பாடசாலையொன்றில் இரண்டு ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னால் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம்  வியாழக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் பற்றி முறைப்பாடு செய்துள்ளனர். இதுபற்றி தெரியவருவதாவது;

அண்மையில் இடம்பெற்ற ஆசிரியர் தினத்தின் போது அப்பாடசாலையில் கல்வி கற்கும் எட்டாம் தரத்தில் உள்ள மாணவர் ஒருவரிடம்  எட்டாம் தரத்தின் உதவிப் பகுதித் தலைவர் ஆசிரியர் தினத்தன்று ஏன் வரவில்லை என்று கேட்டு மாணவரை தண்டித்து ஆசிரியர் தினச் செலவுக்கான பணத்தையும் கோரியுள்ளார்.

தனது மகன் தாக்கப்பட்டதை அறிந்த அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் அம் மாணவரின் தந்தை குறித்த பகுதி பிரதித் தலைவரிடம் இதுபற்றி விசாரித்த போது இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி மாணவர்களுக்கு முன்னிலையில்  அவர்கள் இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். இதனை மாணவர்கள் தமது கைத்தொலைபேசிகளில் படம் பிடித்துள்ளனர்.

இதே பாடசாலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு  முன் தனது உத்தியோக கடமைக்காகச்  சென்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர்  அங்கிருந்த பிரதி அதிபரால் தாக்கப்பட்டு அவரது உடைமைகளும் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடசாலைக்கு  நிரந்தர  அதிபர் ஒருவர் இல்லாத நிலையில் தற்காலிகமாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையிலுள்ள ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளர் அதிபர் கடமைக்காக வலயக்  கல்விப் பணிப்பாளரால் நியமனம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

16 comments:

  1. மாற்றுமதத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய சமுதாயம் இவ்வளவு கேவலமாக செயல் படுவது வருந்தத்தக்கது.வேறொன்றும் இல்லை மமதை மண்டைக்கு ஏறியது.

    ReplyDelete
  2. Replies
    1. Pls.don't. Comments regional raciest. Thank.u


      Delete
    2. Mr.haji Mohamed five fingers not for same.in u r place how? I know.

      Delete
  3. North east worst in our country.dawri.fighting.racism by east and north

    ReplyDelete
    Replies
    1. Pool.don't make comments on Reginal wise .

      Delete
  4. இதை விட மோசமான அல்லது கீழ்த்தரமான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நடக்கவில்லையா?

    ReplyDelete
  5. பலகையில் எழுதி காட்டுவது மாணவர்கலுக்கு புரியாது என்பதற்காகதான் புரன்டு காட்டியுள்ளார்கள் இதுவும் ஒருவகை கற்பித்தல் முரையாகத்தான் இருக்கும் விடுங்கப்பா

    ReplyDelete
  6. Good.take knife or weapon

    ReplyDelete
  7. ஆசிரியர்கள் சமுகத்தின் வழி காட்டி ஒழுக்கம் என்பது அவர்களிடம் இருந்து தான் பரவ வேன்டும் ஆனால் இன்றைய நம் சமூகத்தின் ஆசிரியர்களின் நிலை?????..நாளைய சந்ததிகளையும் பாதிக்குமோ!!!!

    ReplyDelete
  8. Some teachers are living on money only

    ReplyDelete
  9. @al visath
    i enjoyed with ur comment....

    teachers are role model for student but now these days we cant found nice,kind,honest beloved teachers.it is very rare in every division of a large organization such as a government, university, business, or shops.

    ReplyDelete
  10. ஆசாத் சாலி செய்ததை விட மோசமாவா இருக்கு ?

    ReplyDelete
  11. Students are using mobile phones inside school? Where is going our society?

    ReplyDelete
  12. மாணவர்களின் முன்மாதிரிகள் !

    ReplyDelete

Powered by Blogger.