Header Ads



கைதான நேரத்திலிருந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெறும், ஜனக்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜனக்க பண்டார தென்னகோனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

தென்னகோன் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நீதவான் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் ஜனக்க பண்டார தென்னகோனை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நேரத்தில் இருந்து அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

2 comments:

Powered by Blogger.