தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவது, பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்துவதாகும்
தோல்வியடைந்த வேட்பாளர்களை தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொள்வது நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவதாகும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேசியப்பட்டியல் தொடர்பான சட்டத்தின் 14வது பந்தியில் கூட தோல்வியடைந்த வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கும் ஒழுங்கு விதிகள் இல்லை.
புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திலும் அதற்கு தேவையான பந்திகள் இருக்கவில்லை.
எனினும் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலத்தில் தோல்வியடைந்தவர்களை நியமிக்கும் வகையில் ஏற்பாடுகள் இருப்பது சிக்கலுக்குரியது எனவும் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment