Header Ads



இஸ்லாமிய தீவிரவாதிகளினால் பயங்கரவாத சூழ்நிலைக்கான அபாயம் - மைத்திரிக்கு BBS கடிதம்

கடும்போக்குடைய அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து பொதுபல சேனா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

பல்வேறு கடும்போக்குடைய அமைப்புக்களின் செயற்பாடுகளினால் நாட்டின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் தடையாக அமைந்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாம் தீவிரவாதிகளின் அழுத்தம் காரணமாக இலங்கையிலும் பயங்கரவாத சூழ்நிலை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

ஆய்வுகள் விசாரணைகள் நடத்துதல், அரச தலைவர்களை தெளிவுபடுத்தல், அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடாத்த விசேட பிரிவு ஒன்றை நிறுவுதல், அந்த அச்சுறுத்தல்கள் குறித்து பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் அறிவுறுத்தல் மற்றும் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த எமக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென பொதுபல சேனா ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

கடிதம் ஒன்றின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொதுபல சேனா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

3 comments:

  1. நிம்மதியாக இருக்கும் முஸ்லிம்களை, இந்த பாம்புகள் சீன்டிப்பபார்ப்பது வேடிக்கையாகி விட்டது. இவர்கள் ஏதோவொரு சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்பது மட்டும் உண்மை. முஸ்லிம்கள் இன மத ஒழுக்க விழுமியங்களோடும் ,இறை அச்சத்தோடும் செயல் பட்டாள் நிச்சயம் இவர்களை முறியடிக்கலாம்.

    ReplyDelete
  2. Hi hi hi BBS is talking about the peace. Who are they? What a joke?

    ReplyDelete
  3. The BBS is the most dangerous Budhist terrorists we have ever seen! Everyone knows including our president. If they talk about the peace and the harmony of this country it would be nothing buy a joke!

    ReplyDelete

Powered by Blogger.