விசாரணைக்கு சவூதி அரேபியா உத்தரவு
சவுதி அரேபியாவில் நூற்றுக்கணக்கான ஹஜ் பயணிகள் நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பற்றி விசாரணை நடத்த அந்நாட்டு இளவரசரும், சவுதி ஹஜ் கமிட்டி தலைவருமான முகமது பின் நயிப் உத்தரவிட்டுள்ளார். ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை கவனித்து வரும் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனையின்போது, அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
விசாரணை முடிவுகள், மன்னர் சல்மானிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment