Header Ads



தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாக்குமாறு ரணிலிடம் கோரிக்கை விடுத்த மகிந்த

முன்னாள் ஜனாதிபதியான குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ, தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரமதர் ரணிலுக்கு, அனுப்பிய விசேட அறிவிப்பு ஒன்றின் ஊடாகவே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தனது சகோதரியுமான நிருபமா ராஜபக்சவின் கணவரான திருகுமார் நடேசன் ஊடாகவே மகிந்த இதனை அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர், பொலிஸ் விசாரணைகளில் தான் தலையிடமுடியாது எனவும், முடிந்தால் ஜனாதிபதியிடம் இக்கோரிக்கையினை  முன்வைக்குமாறும் தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி சம்பந்தமான பல வழக்குகள் மற்றும் கொலை குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால், மகிந்த ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.