Header Ads



தோல்வியடைந்த தோல்வியடைந்த எஸ்.பி. திஸாநாயக்காவுக்கு பதவி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக தேர்தலில் தோல்வியடைந்த  எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாக இந்த நியமனத்தை அங்கீகரித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் பொருளாளராக பணியாற்றிய எஸ்.பி. நாவின்ன, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதை அடுத்து, அந்தப் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள துமிந்த திஸாநாயக்கவை நிரந்தரமாக நியமிப்பது குறித்தும் நிறைவேற்றுச் சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

1 comment:

  1. Makkal niraharithavarhalai en meendum alaikkirarhal?

    ReplyDelete

Powered by Blogger.