"மைத்திரியும், ரணிலும் இணக்கம்"
ஜனநாய ரீதியான தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த தாமும், ஜனாதிபதியும் இணங்கிக் கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் கலாசாரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தை ஒரு கட்சி மாத்திரம் ஆட்சி செய்வதால் ஏற்படுத்த முடியாது.
நாடாளுமன்றத்தில் பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட அரசியல் கட்சிகளுடன், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பல அரசியல் கட்சிகளும், சமுக சிவில் அமைப்புகளும் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும்.
இந்த நிலையில் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த ஜனாதிபதியும் தாமும் சந்திப்பை நடத்தி இருந்ததாக பிரதமர் கூறியுள்ளார்.
இதன்படி குறைந்தபட்சம் 2 வருடங்களுக்கேனும் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, தேசிய அரசாங்கத்தை உருவாக்கவும், அரசியல் கலாசாரத்தை மாற்றுவதுடன் சட்டத்திருத்தங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment