Header Ads



ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர், சயிட் அல் ஹூசெய்ன் இலங்கை வருகிறார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் அமர்வுகளுக்கு முன்னதாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ம் திகதிக்கு முன்னதாக அவர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை குறித்த அறிக்கை அல் ஹூசெய்ன் சமர்ப்பிக்க உள்ளார். யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.