Header Ads



தேசிய அரசாங்கம் தொடர்பில், இதுவரை எவ்வித ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை - துமிந்த

அரசியல் கட்சிகளுக்குள் அல்லாது பாராளுமன்றத்திற்குள்ளேயே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இன்று (27) நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க இதனைக் கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடர்பில் இதுவரை எவ்வித ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்திற்குள், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக மாத்திரமே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதாக துமிந்த திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்திற்குள் கலந்துரையாடியதன் பின்னரே தேசிய அரசாங்கத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.