Header Ads



செப்டெம்பர் முதலாம் திகதி, கன்னி அமர்வு


புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று அல்லது நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. 

புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக உதவிக் கரும பீடமொன்று எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் திறக்கப்படும் என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.