Header Ads



142 மில்லியன் ரூபாய்களை கோரி, மஹிந்தவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கை போக்குவரத்து சபை இன்று முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு வணிக நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளது.

142 மில்லியன் ரூபாய்களை கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச தரப்பு தமது தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்திய பேரூந்துக்களுக்காக இந்த தொகை பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கில்; சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா உட்பட்டோரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2 comments:

  1. இனி எல்லா வழக்கும் வரும் அப்பச்சிக்கு.பிடித்து உள்ளே போடணும்

    ReplyDelete
  2. Valakkuhal varum aanaal thandanai thaan kidaikkathu. Ellam arasiyal maayangal. Anaivarum makkalai ematruhiravarhal

    ReplyDelete

Powered by Blogger.