Header Ads



'அப்படி கூறியிருந்தால்'

பாராளுமன்ற செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடுவோம் என தமது கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தால் அவரது பெயரை வேட்பு மனுவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறான கலாசாரம் கொண்ட ஆட்சி ஒன்று நாட்டுக்கு அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படாவிட்டால் அடுத்த பாராளுமன்றில் செங்கோலை தூக்கிக் கொண்டு செல்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

களுத்துறை மில்லனிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய பிரதமர் அந்த கருத்துக்கு பதில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.