Header Ads



ரணில் விக்ரமசிங்க என்பவர் வெறும் திருடன் அல்ல, பெரிய திருடன் - கோத்தபாய

திருடன், திருடன் என கூறி கைது செய்யப்படும், குறைந்தபட்சம் ஒரு அரசாங்க அதிகாரியின் மோசடி தொடர்பிலான விசாரணையின் முடிவுகளை கூட வெளியிடாத தற்போதைய அரசாங்கத்தின் பிரதமரே முழு திருடன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொய்களை மாத்திரமே கூறி மக்களை ஏமாற்றியுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நானும், மஹிந்த ராஜபக்சவும் வசிப்பது மிரிஹான பிரதேசத்தில், அப்பிரதேசத்திற்கு விடுதலை புலிகள் பயன்படுத்திய வெள்ளை வான் ஆயுதங்களுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

தமிழ் நாட்டில் சயனைட் குப்பிகளுடன் 04 புலிகள் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் இலங்கையர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறான நிலைமையின் கீழ் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அளவில் அச்சுறுத்தல் ஏற்பாட்டுள்ளது.

அன்று வெள்ளை வான் அச்சம் நாட்டை ஆட்டிப்படைத்தது. இன்று வெள்யை வான் சிக்கிய போது சோபித்த தேரர், சிவில் அமைப்பினர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் தூதுவர்கள் ஏன் இது குறித்து பேசாமல் அமைதியாக இருக்கின்றார்கள்.

திருடர்கள் என கூறி அரசாங்க அதிகாரிகளை கைது செய்தார்கள். விசாரணைகளை நடத்தினார்கள். எனினும் விசாரணைகளின் முடிவுகளை மக்களுக்கு கூறவில்லை.

ரணில் விக்ரமசிங்க என்பவர் வெறும் திருடன் அல்ல பெரிய திருடன்.

3 comments:

  1. ஆசாத் அலி கேட்பது போல் .... ஜே. ஆர் அவரது குடும்பத்தினரை யாரும் கள்ளன் என்றோ கொள்ளைக்காரர்கள் என்றோ சொன்னதில்லை
    பிரேமதாசா அவரது குடும்பத்தினரை யாரும் கள்ளன் என்றோ கொள்ளைக்காரர்கள் என்றோ சொன்னதில்லை, ஸ்ரீமா அவரது குடும்பத்தினரை யாரும் கள்ளன் என்றோ கொள்ளைக்காரர்கள் என்றோ சொன்னதில்லை, சந்திரிகா அவரது குடும்பத்தினரை யாரும் கள்ளன் என்றோ கொள்ளைக்காரர்கள் என்றோ சொன்னதில்லை. ஆனால் மகிந்த அவரது குடும்பத்தினரை மட்டும் ஏன் கள்ளன், கொள்ளையர்கள், கொலைகாரர்கள் என்று மக்கள் சொல்கிறார்கள்? வெள்ளை வேனில் பிடிபட்ட மூவரும் தங்களின் கூலிப்படை என்று வெட்ட வெளிச்சமான பின்னும் புலிகளின் மேல் பழியா? அப்படியானால் புலிகளை அழித்து விட்டோம் என்று கொண்டாடிய்தேல்லாம் வெறும் பம்மாத்து வேலையா?

    ReplyDelete
  2. If you had proved that Ranil and the UNP were traitors , UNP would have lost the
    president election but instead one of your best men came out and told the country
    that your leaders robbed the country and people believed it and defeated you . That's people verdict , more powerful than judiciary . Do one thing for the people ,
    prove that UNP robs the country and we then know to get rid of all thieves and
    choose right candidates from a right party !

    ReplyDelete

Powered by Blogger.