Header Ads



அடுத்த அரசாங்கத்தை அமைக்கவே, நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் - மஹிந்த

அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் நோக்குடனேயே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அடுத்த அரசாங்கத்தை அமைக்கும்  நோக்குடனேயே நான் தேர்தலில் போட்டியிடுவேன், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு தனது சார்பில் போட்டியிடுமாறு எனக்கு அழைப்பு விடுத்துள்ளது, இதனை நான் ஏற்றுக்கொள்வதென தீர்மானித்துள்ளேன்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட புதிய முன்னணியை அமைக்கவேண்டுமா என்பது குறித்து ஆராய்ந்தோம், ஆனால் அது அவசியமில்லை என தற்போது தீர்மானித்துள்ளோம், தற்போது அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

நான் எனது அரசியலின் ஆரம்ப காலம் முதல்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசுவாசமான உறுப்பினராக இருந்து வந்துள்ளேன்.என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.