Header Ads



PCSL-Qatar இன், Educate A Child புலமைப்பரிசில் நிகழ்வு


PCSL-Qatar இன் Educate A Child நிகழ்ச்சித்திட்டத்தின் ஏப்ரல் மாதத்துக்கான புலமைப்பரிசில் நிகழ்வு நேற்று (26/04/2015) அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலையில் நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வில் மேலும் 7 பயன்பெறுனர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அதில் 5 பேர் இவ்வருடம் பல்கலைக்கழகத்துக்கு மருத்துவ, முகாமைத்துவ பீடங்களுக்கு தெரிவானவர்கள் என்பதையும் அதில் ஒரு பயன்பெறுனர் கண்டி மாவட்டத்தில் உள்ள அகுரணையை சேர்ந்தவர் என்பதையும் அக மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.

இதுவரையில் மொத்தமாக 28 பேர் பயன்பெறும் தொடர்தேர்ச்சியான புலமைப்பரிசில் திட்டத்தில் 7 பல்கலைக்கழக, 5 மதரஸா, 5 உயர்தரப் பிரிவு மாணவர்களும் ஏனைய கல்வித் தரங்களில் பயிலுகின்ற மாணவர்களும் அடங்குகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத் நிகழ்வுக்காக அனைத்து வகைகளிலும் பங்களிப்புச் செய்கின்றவர்களுக்கும், முழுமையான உதவிகளையும், ஆதரவுகளையும் வழங்குபவர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் நல் அருள் பாலிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றோம்.

இனி வரும் காலங்களிலும் மேலும் பல மாணவர்களது கல்விக்காக தம்மால் இயன்ற உதவிகளை செய்ய PCSL-Qatar அமைப்பு உறுதி பூண்டுள்ளதுடன் உங்களது உதவிகளையும் நாடி நிற்கின்றது.

No comments

Powered by Blogger.