Header Ads



மகிந்தவுக்கு அரை மனது - ஜப்பான் ஊடகத்துக்கு கட்டுரை எழுதியுள்ள ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அரை மனதுடனேயே மீளமைப்பு நடவடிக்கைகளையும், யுத்த பிரதேசங்களுக்கான அபிவிருத்திகளையும் மேற்கொண்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

"ஜப்பான் ரைம்ஸ்" என்ற ஊடகத்துக்கு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு நாட்டிலும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் சமாதானம் ஏற்பட்டுவிடும் என்று கூறிவிட முடியாது.

ஈராக்கில் சதாம் உசைனின் ஆட்சி கலைக்கப்பட்டதன் பின்னர் அங்கு உள்நாட்டு வன்முறைகள் அதிகரித்துள்ளன.

சிரியா, சூடான் போன்ற நாடுகளிலும் அதே நிலைமையே காணப்படுகின்றன.

இலங்கையிலும் யுத்தம் நிறைவடைந்து 5 வருடங்கள் கடந்துள்ளன.

இன்னும் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை.

இதற்கான முயற்சிகளை மகிந்தராஜபக்ஷ அரைமனதுடனேயே மேற்கொண்டிருந்தார்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.