Header Ads



சிங்களப் பேரினவாதம், வலுக்கத் தொடங்கியுள்ளது

-gtn-

அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக சிங்களப் பேரினவாத வலுக்கத்தொடங்கியுள்ளது. அண்மைக் காலமாக சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் தேசியவாத கொள்கைகள் மக்கள் மத்தியில் திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் எதிரில் இன்றைய தினம் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்திலு

எனினும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பயன்படுத்திய தேசிய கொடியானது திருத்தி அமைக்கப்பட்ட கொடியொன்றாகும். இந்த தேசிய கொடியானது சிறுபான்மை மக்களின் இருப்பினைக் குறிக்கும் வர்ணங்கள் நீக்கப்பட்டு, சிங்கள பெரும்பான்மை சமூகத்தை மட்டும் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்தக் கொடிகளை குறித்த இருவரும் பயன்படுத்தியிருந்தனர். இலங்கை அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இவ்வாறான கொடிகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அரசாங்கத்தை எதிர்க்கும் தரப்பினர் அனைவருக்கும் புலி முத்திரை குத்தும் முயற்சிகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட அனைவரும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல் மோசடிகள் பற்றிய விசாரணையாக இருக்கட்டும், வடக்கு மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகள் மீள வழங்கும் நடவடிக்கையாக இருக்கட்டும் அல்லது வேறும் கடந்த அரசாங்கத்தின் குற்றங்கள் குறைகளை அம்பலப்படுத்தும் நடவடிக்கையாக இருக்கட்டும் அனைத்து நடவடிக்கைகள் மீதும் தமிழீழ விடுதலைப் புலி முத்திரை குத்தும் முனைப்புக்களில் ஒரு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

பிரபாகரன் யுத்தம் மூலம் செய்ய முடியாதவற்றை தற்போதைய அரசாங்கத்தின் ஒருசிலர் மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

எனினும், தமிழ் மக்களை பொறுத்தமட்டில் ஆட்சி மாற்றத்தினால் பாரியளவில் எவ்வித நன்மைகளும் கிடைக்கப் பெற்றதாக தென்படவில்லை.

யுத்த வலயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முதல் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களின் துயரங்கள் துன்பங்கள் அசௌகரியங்கள் தொடர்ந்தும் நீடித்து கொண்டே வருகின்றது.

எனினும் குறுகிய அரசியல் லாபங்களுக்காக இவ்வாறு சிங்களப்பேரினவாத சக்திகள் நாட்டில் இனவாத அடிப்படையில் ஆட்சியை கைப்பற்றிக் கொள்ளும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது.
ம் இதன் வெளிப்பாடுகளை காண முடிந்தது. முன்னாள் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் டலஸ் அழப்பெரும, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் தேசிய கொடிகளை ஏந்தி கோசங்களை எழுப்பி வந்தனர்.

No comments

Powered by Blogger.