எமக்கான புதிய பாதையினை ஆரம்பித்துள்ளோம், முஸ்லிம்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க தயார் - ஞானசாரர்
இஸ்லாமிய சமய நடவடிக்கைகளுக்காக நாம் முரண்படவில்லை. இந்த நாட்டை இஸ்லாமிய மயப்படுத்தும் முயற்சிகளுக்காகவே நாம் போராடினோம். இப்போதும் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையின் உண்மையான மதம் பௌத்தம் மட்டுமே. அதை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமை. அந்த கடமையினையே நாம் செய்து வருகின்றோம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார் . பெளத்த சிங்கள மக்களை பாதுகாக்க தாம் புதிய அரசியல் பாதையினை உருவாக்கவுள்ளதாகவும், தனித்துவ சிங்கள தலைவராக உருவாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொது பல சேனா பெளத்த அமைப்பினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,
இஸ்லாமிய முரண்பாட்டு கோட்பாடொன்று பலமடைந்த நிலையில் நாம் தான் மஹிந்த ராஜபக்ஷவிற்கு துணையாக நின்றோம் . ஆனால் இன்று அரசியல் சுயநலத்திற்காக அவர் எங்களை குற்றவாளியாக்கி அதன் மூலமாக மீண்டும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றார் . சிங்கள மக்கள் மஹிந்த அரசாங்கத்தை முழுமையாக நம்பிய போதிலும் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டனர் . ஆனால் தமக்கான தலைவர் மஹிந்த என்ற இறுக்கமான நிலைப்பாட்டில் அம்மக்கள் இருந்தனர். எனினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அரசாங்கம் தோல்வியடைய அவரின் அவசர செயற்பாடுகளும் அவரை சுற்றியிருந்த கூட்டமுமே காரணம் .
மீண்டும் மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டுகின்றார் . ஆனால் எமது அமைப்பு மக்களை மட்டுமே இலக்கு வைத்து செயற்பட்டதே தவிர அரசியலை இலக்கு வைக்கவில்லை. எனினும் நாம் இப்போது எமக்கான புதிய பாதையினை ஆரம்பித்துள்ளோம்.
இத்தனை காலமாக பொதுபல சேனா அமைப்பு சிங்கள கொள்கையினை பலப்படுத்த என்ன செய்ததோ அதே செயற்பாடுகளை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். எமக்கான புதிய அரசியல் பாதையினை ஆரம்பித்து அதனூடாக சிங்கள பெளத்த மக்களுக்கான தனித்துவ தலைமையினை ஆரம்பிப்பதே எமது நோக்கமாகும். அதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம். நாம் யாரையும் ஆதரிக்கவோ அல்லது யாருடைய துணையுடனும் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை .
இலங்கையின் உண்மையான மதம் பௌத்தம் மட்டுமே. அதை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமை. அந்த கடமையினையே நாம் செய்து வருகின்றோம் .
எனவே இப்போது நாம் எடுத்திருக்கும் முடிவுகள் மிகவும் ஆரோக்கியமானது மட்டும் அல்லது சிங்கள பெளத்த மக்கள் எதிர்ப்பார்க்கும் முடிவும் இதுவே . அதேபோல் எமது புதிய பயணத்தில் தமிழ் ,முஸ்லிம் மக்களையும் இணைத்துக் கொண்டு பயணிக்க நாம் தயார் . அதேபோல் எமது செயற்பாடுகள் யாருக்கும் கட்டுப்பட்டதல்ல , நாம் யாருக்கும் அடிபணிந்து செயற்படப் போவதும் இல்லை என்றார்.
டேய் எருமைமாடு சிங்ஹல மக்கள் நல்லாத்தாண்ட இருக்கிறார்கள் உனக்கு பைத்தியம் என்பது எல்லோரும் அறிந்து வைத்து இருக்கிறார்கள் ஆனால் இலங்கை அரசும் போளிசும்தான் உனக்கு பைத்தியம் என்பதை இன்னும் அறியவில்லைபோலும் கூடிய விரைவில் அவர்களும் அறிந்து விடுவார்கள் அப்போது உன் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கும். அதற்க்கு முன் உன்மீது சுமத்தப்பட்டுள்ள அறுபத்தினாலு வழக்கும் உன்னை மாமியார் வீடு அனுப்பிவைக்கும் என்பதை அறிந்துகொள்
ReplyDeletestart to feel the smell of count down.
ReplyDeleteஇரண்டு விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ReplyDelete1. ஞான சாரர் அவருடைய பாதையில் போகட்டும். நாம் எமது பாதையில் போவோம். அவர் எம்மை இணைத்துக் கொண்டு அவர் செல்ல வேண்டிய எத்தேவையுமில்லை. சுயநலத்துக்காகவே இந்த முயற்சி. 2. எமது ஆயுதம் பிரார்த்தனை. நாம் பல் வேறு விதமாக அல்லாஹ்விடம் எமது நாட்டின் நிலை குறித்து மன்றாடினோம். பல பேர் ''அல்லாஹும்ம ஷத்தித் ஷம்லஹும், வபர்ரிக் ஜம்அஹும்'' எனப் பிரார்த்தித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அதன் கருத்து யாது? யா அல்லாஹ்! இவர்களின் ஒற்றுமை சீர்குலைப்பாயாக, இவர்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவாயாக. பார்த்தீர்களா கைகோர்த்து முஸ்லிம்களுக்கு எதிராக எப்படியெல்லாம் நடக்க முடியுமோ அப்படி எல்லாம் நடந்த இவர்களின் தற்போதுள்ள நிலையை. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
if you want muslim in your side take NFF muzammil and we will give wimal weerawansa free.
ReplyDeleteif you want muslims you can take NFF party muzamil and Azwar and also mazoor moulana ( kalutturai )
ReplyDeleteWatch u r face in the mirror and double check it?????????
ReplyDeleteலண்காகூல் சொல்லவது செரி இந்த துஆவை கேட்காத முஸ்லிம் இல்லை (கொழும்பு முசம்மிலை தவிர )
ReplyDeleteஇவனட வைல செருப்பால அடிக்க ஆள் இல்லையா மூங்ஜியும் முகரக்கட்டையும்
ReplyDeleteWater and oil will not mix together Mr Gnanasara!
ReplyDeleteFool bbs seek muslim community to get beat
ReplyDelete