Header Ads



ஜே.வி.பி.யிடமிருந்து மஹிந்தவுக்கு சவால்..!

அர­சியல் ஆசை இருந்­தாலும் மக்­களின் ஆத­ரவு இன்றி மஹிந்த ராஜபக் ஷவினால் தேர்தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற முடி­யாது. கடந்த ஆட்­சியின் ஊழல் மோச­டி­களை மக்கள் நன்கு அறிந்­துள்­ளனர் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது. முடிந்தால் அடுத்த தேர்­தலில் மஹிந்த போட்­டி­யிட்டு வென்று காட்­டட்டும் என்­றும் அக்கட்சி சவால் விடுத்­தது.

தான் தேர்­தலில் போட்­டி­யிட்டால் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வெளி­நாட்டு ஊடகம் ஒன்­றிற்கு தெரி­வித்­துள்ள நிலையில் இது தொடர்பில் ஜே.வி.பி.யின் கருத்­தினை வின­வியபோதே அக் கட்­சியின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பிட்டதாவது,

கடந்த பத்து வரு­டங்­களில் நாடு எல்­லா­வ­கை­யிலும் சீர­ழிந்த கார­ணத்­தினால் தான் மக்கள் ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தினர். மஹிந்த ராஜ­ப­க் ஷ வின் அர­சாங்­கத்தின் இந்த பத்து வருட ஆட்சிக் காலத்தில் தேசிய ஒற்­று­மையில் பாரிய விரிசல் நிலைமை உரு­வா­கி­யது. மதக் கல­வ­ரங்­களும் அடக்­கு­முறை செயற்­ப­ாடு­களுமே மேலோங்­கிக்­கா­ணப்­பட்­டன. சிறு­பான்மை மக்கள் மட்­டு­மின்றி சிங்­கள மக்­களும் பல சந்­தர்ப்­பங்­களில் பாதிக்­கப்­பட்­டனர். இந் நிலை­மையில் இம்­முறை நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தல் அனைத்து மக்­களின் ஒன்­றி­ணைந்த சிந்­தை­யாலும், அனைத்து மக்­களின் ஆதங்­கத்­தி­னா­லுமே மாற்­ற­ம­டைந்­தது. நிறை­வேற்று ஜனா­தி­ப­தியின் சர்­வா­தி­கார போக்­கினை கட்­டுப்­ப­டுத்தி நல்­லாட்­சியை பலப்­ப­டுத்த இந்த அர­சியல் மாற்றம் கிடைத்­துள்­ளது.

இந் நிலையில் மக்கள் வெறுக்கும் நப­ரா­கவே இன்று மஹிந்த ராஜ­ப­க் ஷ மாறி­யுள்ளார். கடந்த ஆட்­சியில் செய்த தவ­றுகள், பொரு­ளா­தார மற்றும் வாழ்­வா­தார நெருக்­க­டிகள், அடக்­கு­மு­றைகள் என அனைத்தும் மக்கள் மத்­தியில் ஆழ­மாக பதிந்­துள்­ளன. மஹிந்­தவின் அரச குடும்பம் செய்த மோச­டிகள் அனைத்தும் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. இவ்வா­றா­ன­தொரு நிலை­மை யில் மக்கள் மீண்டும் மஹிந்த ராஜ பக் ஷ மற்றும் அவ­ரது குடும்ப அர­சி­ய­லுக்கு ஆத­ரவு தெரி­விக்­க­மாட்­டார்கள். எனினும் மஹிந்­தவின் தோளில் பய­ணித்த ஒரு சிலர் இன்றும் அவரை வைத்து அர­சியல் செய்ய முயற்­சிக்­கின்­றனர். மக்­களின் அத­ரவு இல்­லாத இவர்கள் ஒரு­சிலர் தமது அர­சி­யலை தொடர்ந்தும் கொண்டு செல்­லவே இவ்­வா­றாக முயற்­சிக்­கின்­றனர். அதற்கும் மக்கள் இனிமேல் இடம்கொடுக்கமாட்­டார்கள்.

எனவே மஹிந்த ராஜ­ப­க் ஷ மீண்டும் அர­சி­ய­லுக்கு வந்து அதி­கா­ரங்­களை கைப்­பற்றும் முயற்சி இனி­யொரு போதும் நடக்கப் போவ­தில்லை. ஆனால் மஹிந்த அர­சி­யலில் ஈடு­பட எந்தத் தடை­களும் இல்லை. மக்களின் ஆதரவு இல்லாது அவரால் அரசியல் செய்ய முடியாது, முடிந்தால் மஹிந்த ராஜபக் ஷ அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்றார்.

1 comment:

  1. மஹிந்தவுக்கும் அவரது ஊழல் குடும்பத்துக்கும் அரசியலில் சிவப்புக்கொடியும், சாவு மணியும் தான். இலங்கை வரலாற்றில் தேர்தலில் தோல்வியுற்ற முதல் ஜனாதிபதிக்கான விருதும், நாட்டிலுள்ள ஏழை மக்களின் பணத்தை சூறையாடிய முதல் ஜனாதிபதிக் குடும்பம் என்ற விருதும் இவருக்கு வழங்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.