Header Ads



குற்றங்களை சுமத்துவதால், ராஜபக்ஷ வம்சம் திருடர்கள் ஆகிவிட முடியாது - மஹிந்த

எங்கள் குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.  குற்றச் சாட்டுக்களை முன்வைப்பதால் ராஜபக்ஷ வம்சம் திருடர்களாகிவிட முடியாது. இதேவேளை எனது சகோதரர் பசில் ராஜபக்ஷ எவ்வித குற்றம் செய்யாத நிரபராதி என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும்  சகோதரருமான  பஷில் ராஜபக்ஷவை  பார்வையிடச் சென்று மீண்டும் வைத்தியசாலைக்குள் இருந்து வெளியில் வந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

எனது சகோதரர் பசில் ராஜபக்ஷ எவ்வித குற்றமும்  செய்யவில்லை. அவர் நிருபராதி என்பதை நான் முழுமையாக நம்புகின்றேன். அவர் மீது உள்ள குற்றங்கள் என்ன, அதற்கான அவசியம் என்ன என்று எனக்கு தெரியவில்லை.

தற்போது பசில் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் யோசித்த ராஜபக்ஷ என ஒவ்வொருவரு மீதும் குற்றங்கள் சுமத்தப்படும்.  இவை அரசியல் ரீதியாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் ஆகும்.

எனவே யார் யாரோ குற்றங்களை சுமத்துவதால் ராஜபக்ஷ வம்சம் திருடர்கள் ஆகிவிட முடியாது என்றார்.

6 comments:

  1. குற்றங்களை சுமத்தாவிடினும் நாங்கள் திருடர்கள்தான் அப்படித்தானே

    ReplyDelete
  2. தான் குற்றவாளி என்று பசிலே சோல்லிட்டாரே. இவரென்ன முட்டாள் கதை கதைக்கிறாரு. நாட்டை விட்டு உடனடியாக பசில் ஒழித்தோடியது தன்னை கைது செய்யுமளவு குற்றங்கள் உள்ளது என்று தானே. மகிந்தரே யானைக்கு ஒரு காலம் பூனைக்கும் ஒரு காலம். நாட்டை நாசமாக்கி நாட்டு மக்களுக்கு துரோகம் செய்த இலங்கை வரலாற்றில் முதல் குடும்பம் உங்க குடும்பம் தான்.

    ReplyDelete
  3. If one has not done a crime, he does not need to worry because the crime has to be supported by evidence. Calling for investigation is much batter than those days when wrong doors were unpunished even after evidences were brought very clearly... such as the Terrorism brought by BBS and supporting politician.. (evident with vedio clip and their speech still)

    So be calm and happy that at least current government is not sending you white van rather they only call you people to face the court where you can prove your innocency.

    ReplyDelete
  4. A theif gang in Sri Lanka as never before in history raja paksha n co

    ReplyDelete
  5. உங்களைத் திருடர் என்று சொல்லாவிட்டால் அகராதியில் வேறு என்ன சொல் இருக்கிறது உங்களைப் போன்ற மா திருடர்களுக்கு?

    ReplyDelete
  6. முழுப் பூசணிக்காயை சோற்றில் மூடப் பார்க்கிறீரா? அது முடியவே முடியாது. அப்போ கையுமையுமாகப் பிடிக்கப்பட்ட வாகனங்கள், தோட்டங்கள், ஆடம்பர வீடுகள்? இதெல்லாம் உங்கள் குடும்பம் வயல்வேலை செய்து சேமித்த பணத்தில் வாங்கியதோ? இவ்வாறான முட்டாள் தனமான அறிக்கை விடாது "எல்லா அரசியல்வாதிகளும் தான் அவ்வப்போது சில சில தவறுகளைச் செய்ததைப் போன்று நாமும் செய்திருக்கிறோம், நாம் மட்டும் விதிவலக்கில்லையே" என்று ஒரு சாக்குப் போக்காவது கூறியிருந்தால் பரவாயில்லை.

    ReplyDelete

Powered by Blogger.