Header Ads



நேபாளத்தில் 7.5 ரிச்டர் நிலநடுக்கம் - இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதாம்

நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில் 7.5 ரிச்டர் அளவிவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

ஆறு மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம். டெல்லி, சிக்கிம், லக்னோ, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி புறநகர் பகுதியான நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 வினாடிகள் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது,


No comments

Powered by Blogger.