Header Ads



19 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால், கிடைக்கும் நன்மைகள்..!

19 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அனைத்து இலங்கையருக்கும் அரச நிறுவனங்களில் குடியுரிமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் பாதுகாத்தலினூடாக தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமை.

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பொறுப்பு கூறுவதன் ஊடாக மக்கள் அதிகாரத்தை உறுதிபடுத்தல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் என்பனவாகும்.

1.தேர்தல் ஆணைக்குழு

2. அரச சேவைகள் ஆணைக்குழு

3. தேசிய பொலிஸ் ஆணைக்குழு

4. கணக்காய்வு ஆணைக்குழு

5. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

6. லஞ்ச ஊழல் ஆணைக்குழு

7. நிதி ஆணைக்குழு

8. எல்லை நிர்ணய ஆணைக்குழு

9. தேசிய திட்டமிடல் ஆணைக்குழு

10. பல்கலைக்கழக நிதி ஆணைக்குழு

11. அரச மொழிகள் ஆணைக்குழு

தேசிய திட்டமிடல் ஆணைக்குழுவினூடாக அரச நிறுவனங்களின் பொருள் மற்றும் சேவை கொள்வனவு தொடர்பில் நீதியும் நேர்மையுமான தெளிவாக காணக்கூடியதும், போட்டித்தன்மையுடன் கூடியதுமான மற்றும் செலவு பயனளிக்கக்கூடிய செயன்முறையை மேற்கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும்.

1 comment:

  1. இதில் பொது பல சேனாவை இழுத்து ஜெயிலில் போடும் சட்டமும் உள்ளது என்று சொல்லுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.