Header Ads



19வது அரசியலமைப்பு திருத்த யோசனையின் 3ம் வாசிப்பு 211 மேலதிக வாக்குகளால் இரவு 11 மணியளவில் நிறைவேற்றம்,

இலங்கையின் நாடாளுமன்றத்தில் 19வது அரசியலமைப்பு திருத்த யோசனையின் மூன்றாம் வாசிப்பு மூன்றில் இரண்டு என்ற 211 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது,

திருத்த சட்டமூலத்தின் மொத்தமுள்ள 59 சரத்துக்களும் வாசிக்கப்பட்டு அவற்றில் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தநிலையில் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இலங்கை நேரப்படி இன்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வேளையில் ஆதரவாக 212 வாக்குகள் கிடைத்தன

எதிராக ஒரு வாக்கு செலுத்தப்பட்டது. ஒருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. வாக்களிப்பின்போது 10பேர் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இன்றுமாலையில் செயற்பட்டது போலவே நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார வாக்கப்பில் பங்கேற்கவில்லை. சரத் வீரசேகர எதிராக வாக்களித்தார்.

ஏற்கனவே சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று இரவு 7 மணியளவில் 214 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

No comments

Powered by Blogger.