Header Ads



பௌத்த பிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள்

உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த பத்திரிகை நேற்று முன்தினம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

சுவர்ணவாஹினி சொர்ணமஹால் நிறுவனத்தின் 40 வருட நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளர் சோமா எதிரிசிங்கவினால் 150 பௌத்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, நண்டு, இறால், மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றுடன் குறித்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மலர்களினால் வடிவமைக்கப்பட்ட தோரணம், இளம் பெண்கள் உணவு பரிமாறல், உள்ளிட்ட புகைப்படங்களும், சோம எதிரிசிங்கவின் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை அன்பளிப்புகள் ஆகிய புகைப்படங்களும் அந்த நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என தெரிவித்து பௌத்த பிக்கு ஒருவரே தற்கொலை செய்து கொண்டார்.





2 comments:

  1. நாம் மாட்டிறைச்சி தடை செய்யக் கோரியது அது முஸ்லிம்களின் வியாபாரம் என்பதற்காகவே. நாம் தாராளமாகத் திண்போம். நாம் பெண்களை சட்ட ரீதியாகத் திருமணம் செய்ய முடியாது. மற்றதெல்லாம் எமக்குப் பிரச்சினை இல்லை.
    இப்படிக்கு
    ஞானசாரர்

    ReplyDelete
  2. இல்லை நாங்கள் உடையில் துறவிகள் தானே ,வேறு எல்லாம் செய்வோம்

    ReplyDelete

Powered by Blogger.