Header Ads



நீங்கள் என்ன தூங்குகின்றீர்களா..? சுதந்திர கட்சி எம்.பி.க்களிடம் கேட்ட ஜனாதிபதி மைத்திரி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் எம்மை விளையாட்டுப் பொருளாக நினைத்து செயற்பட்டு வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எங்கள் அனைவரையும் கள்வர்ளாக ஐக்கிய தேசியக் கட்சியினர் சித்தரிக்கின்றனர். எமக்கு எதிராக கடுமையான சேறு பூசல்கள் இடம்பெற்று வருகின்றன.

நாமும் அவர்களின் பைல்களை எடுத்துக் கொண்டு கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு பிரிவிற்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டுமென டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சந்தித்து பேசிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் இருந்தால் நீங்கள் என்ன தூங்குகின்றீர்களா அவற்றை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதற்காகத்தான் தேசிய நிறைவேற்றுப் பேரவை அமைக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.