Header Ads



பாராளுமன்ற தேர்தல் குறித்து, சுதந்திரகட்சி உறுப்பினர்கள் மைத்திரியிடம் முன்வைத்த கோரிக்கை

-Vi-

அவசரமாக பொதுத்தேர்தல் ஒன்றை நடத்த வேண்டாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. 

தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தற்போதுள்ள நாடாளுமன்ற தேசிய அரசாங்கமாக செயற்பட முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

தேசிய அரசாங்கமாக செயற்பட வேண்டுமாயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்  எனவும் சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.