பிரதம நீதியரசரை விரட்டும் போராட்டம் சூடுபிடித்தது
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்க்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை பிரதம நீதியரசர் பதவி விலக தயாராக இருப்பதாகவும் இவருடைய இடத்திற்கு முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டார நாயக்க நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment