Header Ads



ஓமானில் நடந்த சோகம்

-Nawfal Anverdeen-

நேற்று [28-01-2015],ஓமான் நாட்டின்,மஸ்கட் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாட்டின் பிரதான மன நோய் வைத்தியசாலையான Al Masarra Hospital இல் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற அம்பியுலன்ஸ் வண்டியோன்று பாதையை விட்டு விலகி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக் வண்டியொன்றில் பலமாக மோதியதன் காரணமாக மூவர் ஸ்தலத்திலேயே பலியாகினர். 

மேலும் ஒருவர் வைத்தியசாலையில் மரணமடைந்தார். இதி்ல் ஓமான் நாட்டைச் சேர்ந்த சாரதி, பெண் சிற்றூழியர்,நோயாளியும், பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஆண் தாதியொருவரும் அடங்குவர். ஓமான் இனத்தவர்களின் ஜனாஸா நேற்றைய தினமே அடக்கப்பட்டன.எனினும் பிலிப்பைன்ஸ் இனத்தவரின் உடல் சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் இங்குள்ள நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

https://www.youtube.com/watch?v=QCtBOA33FCw



No comments

Powered by Blogger.