Header Ads



''நான் அமெரிக்காவை நம்பவில்லை'' பிடல் காஸ்ட்ரோ

''நான் அமெரிக்காவை நம்பவில்லை; அந்நாட்டு தலைவர்களுடன் பேசவும் இல்லை,'' என, கியூபா நாட்டின் முன்னாள் அதிபர், பிடல் காஸ்ட்ரோ தெரிவித்து உள்ளார்.

கம்யூனிச கொள்கைகளை பின்பற்றும் நாடுகளில் ஒன்றான கியூபாவுக்கும், முதலாளித்துவ நாடுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கும் இடையே, பல ஆண்டுகளாக மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், கியூபா அதிபர், ரால் காஸ்ட்ரோவுக்கும் இடையே, சில மாதங்களுக்கு முன் நடந்த பேச்சில், சுமுக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மீண்டும் மலர்ந்தது. 

இரு நாட்டு உறவு குறித்து, கருத்து தெரிவித்துள்ள, கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, ''நான் அமெரிக்காவை நம்பவில்லை; அந்நாட்டு தலைவர்களுடன் பேசவும் இல்லை,'' என்றார். காஸ்ட்ரோவின் பேச்சு, இரு நாட்டு உறவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Powered by Blogger.