Header Ads



''தேர்தல் செயலக கணனிகளுக்கு, எவ்வித பாதிப்பும் கிடையாது'' வதந்திகளுக்கு ஏமாந்துவிடக் கூடாது

தேர்தல் செயலக கணனிகளுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. தேர்தல் செயலகத்தின் கணனிகள் பழுதடைந்துள்ளதாக வெளியாகி வரும் வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகளை வெளியிடும் பணிகள் செவ்வனே மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் யூ.அமரதாச தெரிவித்துள்ளார்.

பொய்யான வதந்திகளுக்கு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.