இந்த அரசாங்கம் இல்லாமல் போகவேண்டுமென, சாபமிட்டு அலரி மாளிகைமுன் தேங்காய் உடைப்பு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போய் 2000 நாட்கள் நிறைவடைகிறது. ஆனால் இந்த அரசாங்கம் அவரை கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவரது மனைவி சந்தியா எக்னலிகொட இன்று 6-1-2015 அலரி மாளிகையின் முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதன்போது இந்த அரசாங்கம் இல்லாமல் போகவேண்டும் என கூறி சாபமிட்டு தேங்காய் உடைத்து விளக்கு ஒன்றை ஏற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்தார். வரலாற்றில் முதன்முறையாக அலரி மாளிகையின் முன்னால் தேங்காய் உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment