லசந்த விக்ரமதுங்கவின் நினைவு தினம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 6ஆவது இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
இதில் பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவும் கலந்து கொண்டு உரையாற்றினார். ஜனாதிபதி தேர்தல் இடம்பெற இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், படுகொலை செய்யப்பட்ட லசந்த மற்றும் காணாமல் போன பிரகீத் எக்னலிகொட போன்ற ஊடகவியலாளர்கள் விடயத்திலும் நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் எந்த ஒரு விசாரணையையும் நடத்தவில்லை என்று கூறி இவ்விரு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
Post a Comment