Header Ads



புகழ்பெற்ற தமிழ் பழமொழிகளும், இலங்கை அரசியல் வாதிகளும்...!


இணையத்தில் ரசித்த ஒரு பதிவு...!

பொறுத்தார் பூமியாழ்வார் : ரணில்

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு : மைத்திரி

பேராசை பெரு நஷ்டம் : மஹிந்த

நக்குண்டோர் நாவிழந்தார் : அஸ்வர், அலவி, பௌசி, முஸம்மில், பாயிஸ்

சான் ஏற முழம் சறுக்கும் : உலமா கட்சி

இளம் கன்று பயமறியாது : ஹிருணிகா

பிடிபடாதே : ஹிஸ்புல்லாஹ்

தன்வினை தன்னை சுடும் : கோத்தாபய

யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் : சரத்பொன்சேகா, ஷிராணி, சரத் N சில்வா

இக்கரைக்கு அக்கரை பச்சை : SLMC & ACMC

அரசனை நம்பி புருஷனை கைவிடாதே : திஸ்ஸ அத்தநாயக்க

வாய் இருந்தால் வங்காளம் போகலாம் : பஷீர்.S.D.

புலி பசித்தாலும் புல்லை தின்னாது : TNA

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது : G.L.பீரிஸ்

சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது: ஷிப்லி பாறூக்

இனம் இனத்தோடு சேரும் : BBS

பணம் பத்தும் செய்யும் : நாமல்

அப்பன் எட்டடி.. மகன் பதினாறடி : அதுவும் நாமல் தான்

தரித்திரியம் புடிச்ச நாரை கெளுத்தி மீன விழுங்கிச்சாம்... # அதாவுல்லா

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ......# மின்னல் ரங்கா

LIKE and SHARE with Friends

4 comments:

  1. இன்னும் ஏகப்பட்ட பழமொழிகளுக்கு பொருத்தமானவங்க உலாவுராங்கப்பா. விட்டு வெக்காம அவங்களயும் கொன்டுவாங்களேன் சபைக்கி .... பிரமாதம் பிரமாதம்

    ReplyDelete
  2. Minnal ranga very danger.better to avoid minnal prog minority parteis

    ReplyDelete
  3. பிச்சை வேண்டாம் தாயே நாயை பிடித்தால் போதும் - பிள்ளையான் , கருணா

    அடாது செய்தவன் படாது படுவான் - டக்லஸ்

    இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே- திஸ்ஸ அத்தனாயகே

    நக்குற நாய்க்கு செக்கு ( மகிந்த ) என்ன ? சிவலிங்கம் ( மைத்திரி ) என்ன - ஹிஸ்புல்லாஹ்

    அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா? - சஜின் வாஸ்

    ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.- கோதபாய

    மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.- விமல் வீரவன்ச

    உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா? - ஊழல் விசாரணை

    எதார்த்தவாதி வெகுசன விரோதி. - JVP

    கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? அசாத் சாலி

    கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.- மேவின் சில்வா

    குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.- அதாவுல்லா

    குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங் குருவி கூண்டு இழந்தது.- அஸ்வர் ஹாஜி

    சாது மிரண்டால் காடு கொள்ளாது.- சந்திரிகா

    சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.- மேவின் சில்வா

    சாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
    டக்ளசுக்கு TNA

    கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா? - கட்சி மாறியோர்

    ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக்கோபம்.- பிரதம நீதி அரசர்

    உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.- இடதுசாரி கட்சிகள்

    ReplyDelete

Powered by Blogger.