Header Ads



'என்னை கொலை செய்திருப்பார்கள்' - ஜனாதிபதி மைத்திரி

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் தோல்வியைத் தழுவியிருந்தால் கொலை  செய்திருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலத்தில் பாரிய நெருக்குதல்களை எதிர்நோக்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தால் தமது பிள்ளைகளையும் குடும்பத்தாரையும் நிச்சயமாக மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் சிறையில் அடைத்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் பிள்ளைகள் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.  மாற்று வழியின்றியே சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாகவும் அவ்வாறு செய்திருக்காவிட்டால் 100 நாள் திட்டம் சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Gtn

No comments

Powered by Blogger.