Header Ads



முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்ல, என்ன தகுதி இருக்கிறது..? பிரஞ்சு தத்துவமேதை

-நம் உம்மத்-

சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலக தாக்குதல் பற்றி பிரஞ்சு தத்துவமேதை( Michel Onfray ) மைக்கேல் ஆன்பர் தெரிவித்துள்ள கருத்தக்கள் மேற்குலகை அதிர வைத்திருக்கிறது

மேற்குலகும் அமெரிக்காவும் இஸ்லாமிய நாடுகளின் பிரச்சனைகளில் தேவை இல்லாமல் தலையிட்டு ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது

முஸ்லிம்கள் பொறுக்கும் வரை பொறுத்துவிட்டு அவர்கள் தற்காப்பு தாக்குதலில் இறங்கும் போது அவர்களுக்கு தீவிரவாதிகள் என்று மேற்கு உலகம் பட்டம் சூட்டுகிறது

உண்மையில் முஸ்லிம்கள் அப்பாவிகள் ,மேற்கு உலகை ஆளகுடியவர்கள் தான் தீவிரவாதிகள்

மேற்கு உலகமும், அமெரிக்காவும் எண்ணுவது போல் முஸ்லிம்கள் ஏமாளிகள் அல்ல. இஸ்லாமிய நாடுகளில் நாம் அரங்கேற்றுகின்ற குழப்பங்கள் கொலையை விடவும் கொடியதாக இருக்கிறது அதை அவர்கள் பொறுக்க முடியாத சூழல் தோன்றும் போது சில தாக்குதல்களை அவர்கள் அரங்கேற்றுகிறார்கள். அந்த தாக்குதல்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காகவும்,தன் நாட்டின் சுதந்திரத்திற்காகவும் போராடக் கூடிய போராட்டமே தவிர அது தீவிரவாதம் அல்ல. அப்படி பார்த்தால் இந்த உலகில் நடக்கக் கூடிய அனைத்தும் தீவிரவாதமே..!

அமெரிக்கா,இஸ்ரேல் மற்றும் மேற்கிந்திய நாடுகள் அனைத்தும் தீவிரவாத நாடுகளே.......

சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகையை கட்டுக்குள் வைக்க வக்கில்லாத நமக்கு முஸ்லிம்களை தீவிர வாதிகள் என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது

முஸ்லிம்களையும் அவர்களின் உயிருக்கும் மேலான வழி காட்டி முஹம்மது நபியையும் கேலி சித்திரமாக சார்லி ஹெப்டோ வரைந்ததினால் தான் இந்த பிரச்சனைகள் தோன்றியிருக்கிறது

கண்டிக்க படவேண்டியது சார்லி ஹெப்டோ பத்திரிகையே தவிர முஸ்லிம்கள் அல்ல முஸ்லிம்கள் செய்திருப்பது எதிர் வினையே.

என தனது பிரான்ஸ தொலை காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்

Like ·  · Share

3 comments:

  1. இவர்களைப் போன்றோரின் காத்திரமான கருத்துக்கள் ஓங்கி ஒலித்தால், மேற்குலகால் அறிவிலிகளாக்கப்படும் மேற்குலக மக்கள் அறிவு பெற வாய்ப்புண்டு. இதற்கு எமது (முஸ்லிம்கள், முஸ்லிம் நாட்டுத் தலைமைகள்) பங்களிப்பு என்ன?

    ReplyDelete
  2. Alhamdulillah, Very nice & truth Information for this world

    ReplyDelete

Powered by Blogger.