அட்டாளைச்சேனை பிரதேச நீர்பாசன, பிரச்சினைகளை தீர்ப்பதாக அனோமா கமகே உறுதி
-எம்.வை.அமீர் -
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் நீர்பாசன பிரதி அமைச்சருமான திருமதி அனோமா கமகே அவர்களுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வொன்று அம்பாறை ஐக்கிய தேசிய கட்சி மாவட்டக்கரியலயத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வின் பின்னர் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் அட்டாளைச்சேனை பிரதேசம் சார்பாக அட்டாளைச்சேனை அணைத்து பள்ளிவயல்க்களின் சம்மேளத்தின் தலைவரும் , தென்கிழக்கு பல்கலை கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.ஹனீஸ் , ஐக்கிய தேசிய கட்சின் தேசிய அமைப்பாளரும் கிழக்குமாகான சபை எதிர்கட்சித்தலைவர் திரு தயா கமகே அவர்களின் முஸ்லிம் பிரதேச இணைப்பாளர் யூ.எல். இபாஸ் முகமட் மற்றும் குளோபல் ஜொப்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் என்.ரீ. நுபைல் ஆகியோரை கொண்ட குழுவினர் இடம்பெற்றனர் .
இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச நீர்பாசன பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட பிரதி அமைச்சர் அதற்கான தீர்வுகளை மைத்திரி அரசின் 100 நாள் திட்டத்தில் அவசரமாக முடித்துதருவதாக உறுதியளித்தார். அதே வேளை இப்பிரதேச விவசாயிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு இக்குழுவை பணித்திருந்தமை குறிபிடத்தக்கது.
Post a Comment