Header Ads



''மஹிந்த சிந்தனை முக்கால நோக்கு'' திங்கட்கிழமை வெளியிடப்படுகிறது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் எதிர்வரும் 22ம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது. மஹிந்த சிந்தனை முக்கால நோக்கு என்ற தொனிப் பொருளில் இம்முறை கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் முற்பகல் 11 மணியளவில் தேர்தல் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.

2005ம் ஆண்டில் மஹிந்த சிந்தனை, 2010ம் ஆணடில் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு இம்முறை 2015ம் ஆண்டில் மஹிந்த சிந்தனை முக்கால நோக்கு என்ற அடிப்படையில் கொள்கைப் பிரடகனம் வெளியிடப்பட உள்ளது.


No comments

Powered by Blogger.