Header Ads



மைத்திரியின் கூட்டத்தில் மீண்டும் மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்தும் பாதிப்பு

-Tm-

ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவிருந்த கூட்டத்துக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்( கபே) தெரிவித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன பங்குபற்றவிருந்த கூட்டங்கள், கண்டி தெல்தெனிய மற்றும் நாவலப்பிட்டிய பகுதிகளில் இன்று நடைபெறவிருந்தன என்றும் கபே தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் தெல்தெனிய பகுதியில் இன்று காலை கூட்டம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், அங்கு எவ்விதமான முன்னறிவித்தல்களும் இன்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதேவேளை, அப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களின் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது என்றும் அவ்வமைப்பு தெரவித்துள்ளது.

No comments

Powered by Blogger.