Header Ads



நிந்தவூர் வைத்தியசாலைக்கு முன்னால் கண்டனக் கோஷங்கள்


(சுலைமான் றாபி)

நிந்தவூர் - 08ம் பிரிவைச் சேர்ந்த அர்சாத் முஹம்மது ஹனீப் எனும் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தை இன்று (20) நீரில் மூழ்கி மரணமாகியுள்ளது. மரணமாகிய குழந்தையினை நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது கடமையிலிருந்த வைத்தியர் குழந்தை இறந்து விட்டது எனவும், அதன் பிறகு குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்ற போது மீண்டும் குழந்தைக்கு உயிர் திரும்பி வந்ததாகவும் அதன் பின் மேலதிக சிகிச்சைக்காக நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் மீண்டும் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மரணமடைந்த குழந்தைக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாமையினாலும், கடமையிலிருந்த வைத்தியர்களின் அசமந்தப் போக்குகளினாலும் இப்பிள்ளைக்கு மரணம் நேர்ந்துள்ளது என பொது மக்கள் நிந்தவூர் வைத்தியசாலைக்கு முன்னால் கண்டனக் கோஷங்கள் எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும். 


1 comment:

  1. Aspathiriya adichi noruki antha kaan kedde Doctorai kaddi thookungal........

    ReplyDelete

Powered by Blogger.